சென்னை: தமிழகத்தில் உள்ள 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்துள்ளார். மேலும், நேற்றைய (மார்ச் 25) பிளஸ் 2 தேர்வினை எழுத முடியாதவர்களுக்கு வேறொரு நாளில் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக 26ம் தேதி நடக்க இருந்த பிளஸ் 1 தேர்வும், நடக்கவிருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. 1 முதல் ஒன்பதாம் வகுப்புகளுக்கும் தேர்வு ஒத்திவைக்கப்படுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்ற குழப்பம் நீடித்து வந்தது.
9ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி: முதல்வர் அறிவிப்பு