கொரனோ வைரஸா?- ப்ளீஸ் என்னை செக் பண்ணுங்க; பெங்களூருவில் அச்சத்தில் ஓடிவரும் மக்கள்!

வெளிநாடுகளுக்கு பயணம் சென்று பெங்களூரு திரும்பிய மக்கள் கொரனோ வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்று சோதனை செய்து கொள்ள மருத்துவமனைக்கு சென்ற வண்ணம் இருக்கின்றனர்.


சீனாவின் வுஹான் மாகாணத்தில் தொடங்கி உலகின் பல்வேறு நாடுகளுக்கு கொரனோ வைரஸ் பரவியுள்ளது. இதன் காரணமாக 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் வைரஸ் பாதிப்பால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தியாவிலும் கொரனோ வைரஸ் பாதிப்பு குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.