சென்னை பூந்தமல்லியில், சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த குப்பைமேடு பிரச்னையை, பயோ மைனிங் திட்டம் மூலமாக, முழுமையாக அகற்றி, சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது
பூந்தமல்லியில், சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த குப்பைமேடு பிரச்னையை, பயோ மைனிங் திட்டம் மூலமாக, முழுமையாக அகற்றி, சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
நகராட்சிக்கு சொந்தமான, 1.5 ஏக்கர் நிலம் இதன்மூலம் மீட்கப்பட்டும் உள்ளது.
21 வார்டுகளை கொண்ட பூந்தமல்லி நகராட்சியில் நாள் ஒன்றுக்கு, சுமார் 21 டன் குப்பை சேர்கிறது. பூந்தமல்லி நகரம், அப்போது பேரூராட்சியாக இருந்தது.அந்தக் காலத்தில் இருந்தே, பாரிவாக்கத்தில் உள்ள சுமார் 1.5 ஏக்கர் இடத்தில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு வந்தன.
இப்படியே 25 ஆண்டுகளுக்கு மேலாக கொட்டப்பட்டதால், ஏறக்குறைய 20 ஆயிரம் டன்னுக்கும் அதிகமான குப்பை, மலை போலத் தேங்கியது. இதனால், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வந்தன. அவ்வப்போது இதை தீயிட்டு எரிப்பதும் வழக்கம். இதனால் புகை மூட்டம் அதிகமாகி, மக்கள் சிரமப்பட்டு வந்தனர்.தொடர்ந்து இங்கே குப்பை கொட்டக்கூடாது என பொதுமக்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்ததால், இவை திருவேற்காடு குப்பைக் கிடங்கிற்கு எடுத்து செல்லப்பட்டன.
இந்நிலையில், 1.87 கோடி ரூபாய் செலவில், குப்பையை, 'பயோ மைனிங்' முறையில் பிரித்து அகற்ற திட்டமிடப்பட்டது. கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், இப்பணி துவங்கியது.